நாமக்கல். செப்.10: நாமக்கல்லை அடுத்த பேளுகுறிச்சியை சேர்ந்த தாயும், மகனும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை அடுத்த வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சம்பூரணம்(70). இவரது மகன் பூமாலை(50). இவர்களது வீட்டின் முன்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சம்பூரணம் மற்றும் பூமாலை மீது, ஊர் பொதுமக்கள் பேளுக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், இரு தரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.