ஊட்டி, செப். 10: பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி புதுமந்து பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதுதொடர்பாக ஊட்டி புதுமந்து அருகேயுள்ள பாரஸ்ட் கேட், பசுவைய்யாநகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுமந்து, பாரஸ்ட்கேட், பசுவைய்யாநகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில் இப்பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்து வருகிறோம். இங்கு மதுபானங்களை வாங்கி அருந்த கூடிய குடிமகன்களால் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.