பெண்ணிடம் நகை பறிப்பு

சத்தியமங்கலம், செப்.10: புஞ்சைபுளியம்பட்டி டாணாபுதூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார். இவரது மனைவி பாக்கியா (28). இவர், நொச்சிக்குட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக வேலை செய்து வருகிறார். பாக்கியா நேற்று புங்கம்பள்ளியில் உள்ள குழந்தைகள் நலத்திட்ட அலுவலகத்திற்கு செல்வதற்காக புஞ்சைபுளியம்பட்டி- சத்தியமங்கலம் சாலையில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். புதுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது ஹெல்மெட் அணிந்து பின்னால் பைக்கில் வந்த இருவர் பாக்கியா கழுத்தில் இருந்த 3.5 பவுன் செயினை பறித்து சென்றனர்.  இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பாக்கியா உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: