திருவண்ணாமலை, செப்.10: பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்கக்ேகாரி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 640 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.இந்நிலையில், பெரணமல்லூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அனைத்து இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில், வந்தவாசி தாலுகா பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரியதாகும். அதில், 8 குறு வட்டங்கள், 161 வருவாய் கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வந்தவாசி தாலுகாவில் 4.50 லட்சம் மக்கள் இடம் பெற்றுள்ளனர்.