ஆரணி, செப்.10: ஆரணியில் பைக்கை விடுவிக்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற கார் டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஷராப்பஜார் பகுதியில் உள்ள வராகமூர்த்தி தெருவை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(32), கார் டிரைவர். இவர் கடந்த 5ம் தேதி ஆரணி ஷராப்பஜார் தெருவில் சாலை ஓரமாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனம் நிறுத்தி இருந்த இடத்தில் மது குடித்தனர். அப்போது, போலீசார் ரோந்து வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்த போலீசார் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் வேலை முடித்து விட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கு இரு சக்கர வாகனம் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, புகாரை பெற்ற போலீசார் காவல் நிலையத்தில் உள்ள வாகனமா என கேட்டனர். அதற்கு அவர் என்னுடைய வாகனம் தான் என கூறியுள்ளார். பின்னர், போலீசார் அந்த வாகனத்திற்கான ஆவணங்களை காண்பித்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் இரு சக்கர வாகனத்திற்கான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்தார். அதைபெற்று சரிபார்த்தபோது கோபாலகிருஷ்ணனின் வாகனம் தான் என்று தெரியவந்தது. பின்னர், வாகனத்தை கொடுக்க பணம் கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தார்களாம்.