திருவண்ணாமலை, செப்.10: பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனர் துணிந்து, மானிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என திருவண்ணாமலையில் ெதால் திருமாவளவன் கூறினார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ெதால் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் பிரச்னையில் மோடி அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளது. இது குறித்து நாளை (இன்று) சென்னையில் நடைபெற இருந்த போராட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகிற 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் ஜனநாயக கட்சிகள் பங்கேற்கின்றன. மேலும், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அற்புதம்மாளுடன் சேர்ந்து முதலில் அமித்ஷாவிடம் முறையிட்டபோது சிக்கலான பிரச்னை என்னால் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது என்று அவர் கூறினார்.இதையடுத்து, மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து மனுக்களை அளித்தபோது அமித்ஷா வழக்கம்போல புன்னகைத்துவிட்டு சென்று விட்டார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனர் விரைந்து துணிந்து, அவர்கள் மீது கருணை அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் முடிவெடுக்க வேண்டும்.