திருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில் ₹1.32 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து செய்து செல்கின்றனர். இதுதவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத(ஆடி) பவுர்ணமி கடந்த 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கி, மறுநாள்(15ம் தேதி) மாலை 6.10 நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கடந்த 14ம் தேதி இரவு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.