தேவாங்கர் சமூகநல மாநாடு ஆலோசனை கூட்டம்

அருப்புக்கோட்டை, ஆக.20: தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூகநல மாநாடு வருகிற செப்டம்பர் 21ம் தேதி கோவையில் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டையில் நடந்தது.  தேவாங்கர் குல ஜெகத்குரு, ஹம்பி கூட காயத்ரி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் தலைமை வகித்தார். ஐம்பதூர் பட்டத்து எஜமானவர் வேல்முருக கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அருப்புக்கோட்டை தேவாங்கர் மகாஜனசபை தலைவர் முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார் வரவேற்றார். தயானந்தபுரி சுவாமிகள் மாநாடு குறித்து விளக்கி பேசி ஆசி வழங்கினார்.  நிகழ்ச்சியில் தேவாங்கர் மகாஜன சபை செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வீரசுந்தரமணி, கல்வி கமிட்டித்தலைவர் முருகேசன், பொருளாதார கமிட்டி தலைவர் ஜெயராமன், உபதலைவர் முனீஸ்வரன், பள்ளிச் செயலாளர் கண்ணன், ஐம்பதூர் பட்டத்து நிர்வாக சபை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர்கள் சங்கரவேல், சங்கரராஜ், சுப்பையன், மற்றும் ஐம்பதூர் அம்பலகாரர்கள் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: