செங்கம், ஆக.20: செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து தாலுகா அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். மேலும், ஒருவர் தீக்குளிக்க முயன்றாதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தாழையுத்து கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபடவும், கோயிலை புதியதாக கட்டவும் முடிவு செய்து நேற்று அங்கு சென்று சுத்தம் செய்தனர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தன் பெயரில் பட்டா உள்ளது. எனவே, இங்கு யாரும் கோயில் கட்டக்கூடாது என்று கூறினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் செங்கம் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.