கலசலிங்கம் பல்கலையில் மாணவர்கள் கிளை துவக்க விழா

திருவில்லிபுத்தூர், ஆக. 14: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலையில் கலசலிங்கம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் சார்பில் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம் மாணவர்கள் கிளை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பதிவாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். டீன் ரவீந்திரன் வரவேற்றார் தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

என்.ஐ.பி.எம் மாணவர் கிளையை துவக்கி வைத்து ஆதிலட்சுமி லோகமூர்த்தி பேசினார்.  கிளை துவக்க விழாவில் நெல்லை மதுரா கோட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் முருகேசன் கலந்து கொண்டார். துவக்க விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து துறைத்தலைவர் விஜி பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஐயம்பெருமாள், செல்வராணி மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: