வேட்டவலம், ஆக. 14: வேட்டவலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை மீது மயக்க மருந்து தெளித்து 5 பவுன் நகையை பறித்து ெசன்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேட்டவலம்- திருக்கோயிலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷம்(72), ஓய்வு பெற்ற ஆசிரியை. இந்நிலையில் கடந்த 29ம் தேதி இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவர் பிரகாசத்திடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொடுத்த பிறகு ‘உங்களுடைய மகள் மேரியை எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிந்தவர் போல் பேசினாராம். அப்போது நீங்கள் அணிந்திருக்கும் செயினை போல் எனது அம்மாவுக்கும் வாங்கி கொடுக்க வேண்டும். அதனால், உங்கள் செயினை காண்பியுங்கள் என்று கேட்டுள்ளார்.