வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்

திருப்பூர், ஆக 14: திருப்பூர் ராயபுரம் பகுதியை வசித்துவருபவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த யோகேஷ் சிங்(47). இவரது நண்பர்கள் விக்ரம் சிங்(43), கஜேந்திர சிங்(34), அனில்குமார். இவர்கள் பனியர் வியாபாரம் ெசய்து வருகின்றனர். இந்நிலையில் சூசையாபுரம் பகுதியில் உள்ள காலி இடம் ஒன்றில் யோகேஷ் சிங் மற்றும் அவரது நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(25), ரத்தினகுமார்(23), மனோரஞ்சன்(23). அருண்குமார்(21) ஆகியோர் யோகேஷ் சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு யோகேஷ்சிங் மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர். இதில் கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலை உடைத்து விக்ரம் சிங் தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த விக்ரம் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார் கோபாலகிருஷ்ணன், ரத்தினகுமார், மனோரஞ்சன், அருண்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: