வெய்க்காலிபட்டி கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

கடையம், ஜூலை 24: கடையம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது. அருட்தந்தையர்கள் ஆசியுரை வழங்கினர். கல்லூரி செயலர் போஸ்கோ குணசீலன் வரவேற்றார். கல்லூரியின் கல்வி ஆலோசகர் அன்னராஜா மற்றும் மாடியனூர் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் தேவதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் பசுமையான நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். அருட்தந்தை குழந்தைராஜ் ஆசி வழங்கினர். கல்லூரியின் முதல்வர் மேரிராபலின் கிளாரட் கல்வியியல் கல்வி குறித்து பேசினர். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், செயலாளர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் அல்போன்சா நன்றி கூறினார்.

Related Stories: