ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

பரமத்திவேலூர், ஜூலை 16:  மோகனூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள்  சங்க மாதாந்திர கூட்டம், தலைவர் காளியப்பன் தலைமையில் நடந்தது. முன்னதாக அருணகிரிநாதன் வரவேற்றார். செயலாளர் பரமசிவம் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் சுப்ரமணியன் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். புதிய உறுப்பினராக சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, கூட்டம் தொடங்கியதும் உயிரிழந்த சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் கருணாநிதி, வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதுகாப்பு, உணவு முறைகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.

Related Stories: