நாகர்கோவில், ஜூலை 16: மணவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களான பத்மதாஸ், தங்கப்பன், சிவதாணுலிங்கம் உள்ளிட்டோர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு: மணவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 6ம் தேதி மகாசபை கூட்டம் நடந்தது. அப்போது செயலாளரால் படிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையில் தணிக்கை செய்யப்பட்டு தணிக்கை அதிகாரியால் கையொப்பமிட்ட பின்பு வங்கி செயலாளரால் தணிக்கை அறிக்கையில் அழித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தெரிய வருகிறது.