சாம்பவர்வடகரை ஆதீனம் காத்த அய்யனார் பனையடியான் கோயில் கொடை விழா

நெல்லை, ஜூலை 12:  சாம்பவர்வடகரை ஆதீனம் காத்த அய்யனார், பனையடியான் கோயில் கொடை விழா, கடந்த 5ம் தேதி கால்நாட்டுடன் துவங்கியது. நேற்று மாலை தீர்த்தம் எடுத்து வருதல், குடியழைப்பு, அலங்கார பூஜை நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. மாலை அலங்கார பூஜை, தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 20ம் தேதி 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

Related Stories: