கொல்லப்பட்ட 40 நாய்களுக்கு புதுவையில் அஞ்சலி

புதுச்ேசரி, ஜூன் 27:    தெலுங்கானா மாநிலம் சித்திபேட் என்ற ஊரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 40க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட நாய்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒதியஞ்சாலை காவல்நிலையம் அருகே நேற்று மாலை நடந்தது. புதுச்சேரியை சேர்ந்த ஒரு சமூக சேவை அமைப்பினர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கொல்லப்பட்ட நாய்கள் படங்கள் இடம்பெற்ற பேனருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: