நாளை நடக்கிறது கரூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?

கரூர், ஜூன். 27: பயணிகள் பயன்பாட்டிற்காக நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் நகராட்சி சார்பில் கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக இந்த தொட்டி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும், தொட்டியை சுற்றிலும் சுகாதாரமற்ற நிலையும், தொட்டியின் திருகு பைப்புகள் அனைத்தும் சிதிலடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையும் உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலனுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த தொட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சரி வர பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: