அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

விருதுநகர், ஜூன் 26: விருதுநகர் அருகே உள்ள சின்னபேராலிக்கு நேற்று முன்தினம் மாலை அரசு பஸ்சை டிரைவர் ராஜேஷ்கண்ணன் (41) ஓட்டி சென்றுவிட்டு, மீண்டும் அங்கிருந்து விருதுநகருக்கு பஸ்சை எடுத்து வந்துகொண்டிருந்தார். கின்னபேராலி கண்மாய் கரை வளைவில், சாலையில் இடையூராக டூவீலரில் நின்ற வினோத்தை (23) பார்த்து ஓரமாக நிற்குமாறு டிரைவர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்து, பஸ்சை நிறுத்தி, அதன் பக்கவாட்டில் தட்டி முன்வாசல் வழியாக ஏறிய வினோத், டிரைவர் ராஜேஷ் கண்ணனை முகத்தில் சரமாரி குத்தி, கால்களால் மிதித்து தாக்கினார். அத்துடன் ‘பஸ்சை ஒழுங்கா ஓட்டு இல்லை கொன்றுவிடுவேன்’ என மிரட்டி உள்ளார். காயமடைந்த டிரைவர் ராஜேஷ்கண்ணன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று, இது தொடர்பாக விருதுநகர் ரூரல் போலீசில் அளித்தார். இதன் புகாரில் வழக்குப்பதிந்த போலீசார், அரசு பஸ் டிரைவரை அரசு பணியை செய்ய விடாமல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வினோத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: