புகையிலை விற்றவர் கைது

வத்திராயிருப்பு, ஜூன் 26: வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில், எஸ்.ஐ.பால்வண்ணநாதன் மற்றும் போலீசார் நேற்று கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் பிரபாகரன் என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. ரூ.18,340 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடைக்காரர் பிரபாகரனை கைது செய்தனர்.

Related Stories: