வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை

விருதுநகர், ஜூன் 26: விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் புதிரை வண்ணார் எழுச்சி பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

சார்த்தூர் அமீர்பாளையம், சிந்தபுலி, இருக்கன்குடி, ஒத்தையால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட ஊர்களில் புதிரை வண்ணார் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இதில், சாத்தூர் அமீர்பாளையத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் சமூகத்தை சேர்ந்த 51 குடும்பத்தினர் கடந்த 22.5.2018ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தோம். அதை தொடர்ந்து எலுமிச்சைபட்டி கிராமத்தில் இடத்தை அதிகாரிகள் காண்பித்தனர். ஆனால், நிலத்தை கையகப்படுத்தி பட்டா வழங்க இதுநாள் வரை எந்த விதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் புதிரை வண்ணார் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: