விருதுநகர், ஜூன் 26: சிறு தொழில் துவங்க ரூ.50 ஆயிரம் கடன் வழங்க 3 ஆண்டாக மாற்றுத்திறனாளி தம்பதியை வங்கி அலைக்கழிப்பு செய்ததால் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி தாயில்பட்டியை சேர்ந்த திருமலைக்குமார் என்ற மாற்றுத்திறனாளி அளித்த மனு:கணவன்-மனைவி இருவரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளோம். 7 வயதில் மகன் உள்ள நிலையில் தினசரி வாழ்வாதாரத்தை ஓட்டுவது சிரமமாக உள்ளது. சிறு மற்றும் குறு தொழில் துவங்க சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தாயில்பட்டி ஐஓபி வங்கி கிளைக்கு 23.1.2016ம் தேதி பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.