பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

காலாப்பட்டு, ஜூன் 26: புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகோட்டக்குப்பம் நூர்முகமது தெருவை சேர்ந்த சங்கர் மனைவி புஷ்பா (32). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேஷ், அதிக சத்தத்துடன் பாட்டு ேபாட்டுள்ளார். இதனை புஷ்பா தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது புஷ்பாவை வெங்கடேஷ் சரமாரி தாக்கி, தரக்குறைவாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து புஷ்பா, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேஷை தேடி வருகின்றனர்.

Related Stories: