மாவட்டத்தில் சத்துணவு திட்டம் குறித்து புகார் தெரிவிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 25:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டம் தொடர்பாக இலவச தொலைபேசி எண், இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சத்துணவு திட்டம் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கனவே 1800 425 7009 என்ற இலவச எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சத்துணவு திட்டத்தை பற்றி அறிந்து கொள்ளவும், சத்துணவு திட்டம் தொடர்பாக பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் புகார் அளிக்க விரும்பினால், www.midaymeal.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம். எனவே, பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: