சேதுபாவாசத்திரம், ஜூன் 25:மழை பெய்ய வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடச்சிக்காடு கிளை சார்பில் மரக்காவலசை கமால் பாஷா இல்லம் அருகே சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட பேச்சாளர் ஆவணம் முஹம்மது யூசுப் பங்கேற்று தொழுகை நடத்தினார். கிளை தலைவர் முகமது அனிபா, செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் சேட் இப்ராஹிம்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கும்பகோணம்: கும்பகோணத்தில் சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசல் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. மாநில செயலாளர் தாவூத் கைசர் தலைமை வகித்தார். இதில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், மழை வேண்டியும், தமிழக அரசு தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.