சிவகாசி, ஜூன் 25: சிவகாசி அருகே, பள்ளபட்டியில் அரசு பள்ளி அருகே கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியரை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். சிவகாசி அருகே, பள்ளபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் போதிய வாறுகால் வசதியில்லாததால் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதி அருகே,
மாணவர்கள் சாப்பிடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.