திண்டுக்கல், ஜூன் 25: சாணார்பட்டி அருகே செங்குறிச்சி கூட்டுறவு வங்கி மோசடி குறித்த விசாரணை முறைகேடு செய்தவர்களை காப்பாற்றும் நோக்கி நடந்து வருவதாக வங்கியின் துணை தலைவர் கலெக்டரிடம் புகார் அளித்தார். சாணார்பட்டி அருகே செங்குறிச்சியை சேர்ந்தவர் நல்லுச்சாமி. இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் வினய்யிடம் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘நான் செங்குறிச்சி தொடக்க விவசாய கூட்டுறவு வங்கியில் துணை தலைவராக உள்ளேன். இந்த வங்கியில் போலி பட்டாக்களை தயாரித்து கடன் வாங்கியுள்ளனர். மேலும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு போலியாக கையெழுத்திட்டு ரூ. பல லட்சம் கடன் வழங்கியுள்ளனர். இவ்வாறு பணமோசடி, ஆள்மாறாட்டம், அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர், துணைப்பதிவாளரிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன்.