பழநி, ஜூன் 21: பழநி அருகே பள்ளி வாகனம் மோதி போலீஸ்காரரின் 2 வயது மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பழநி அருகே சரவணபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). அம்பிளிக்கை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆதீஷ் (2). நேற்று சுரேஷின் உறவினரான வனிதா பழநி பாரத் வித்யா பவன் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட ஆதீஷை அழைத்து சென்றுள்ளார். அப்போது வாகனத்தின் முன்புறம் சென்ற ஆதீஷை கவனிக்காமல் டிரைவர் வாகனத்தை கிளப்பி உள்ளார்.