கிருஷ்ணகிரி, ஜூன் 21: ஊத்தங்கரையில் நடந்த முகாமில் தொழிலாளர் நல வாரியத்தில் 336 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் வகுப்பை சார்ந்த தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் சிறப்பு முகாம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன் பங்கேற்று, தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.