கீழ்பென்னாத்தூர், ஜூன் 21: மணப்பெண் காதலனுடன் சென்றதால், அவரது தங்கையான மைனர் பெண்ணுக்கு நேற்று காலை நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவர், ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு தனது காதலனுடன் இளம்பெண் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பெற்றோர், இளம்பெண்ணின் தங்கையான 17 வயது மைனர் பெண்ணுக்கு அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து தர முடிவு செய்தனர்.