ராதாபுரம், ஜூன் 19: ராதாபுரத்தில் மூடிக்கிடக்கும் ஆதார் மையத்தை திறக்க போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் நீண்ட நாட்களாக செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. இதனால் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு தாலுகா வரும் மக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. தற்போது ஆதார் எண் கட்டாய தேைவ என்பதால், அதனை பெற தவறியவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் மையம் மூடியே கிடப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆரம்பத்தில் அரசே சிறப்பு முகாம்களை நடத்தி ஆதார் எண்களை வழங்கியது. பின்னர் தனியார் இன்டர்நெட் சென்டர்களிலும் தங்களது ஆதாரை பதிவு செய்யலாம் என இணைய வழியையும், செயலியையும் உருவாக்கி வெளியிட்டது. இதில் தவறுகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டி தனியாரிடம் ஆதார் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.