திருப்பூர், ஜூன் 19: திருப்பூர், புதிய பஸ் நிலையம் எதிரே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் நிலங்களை தனியார்கள் வீடு கட்டுவதற்கும், கம்பெனிகள் கட்டுவதற்கும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை, மீட்க வேண்டும் என இந்து அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரே மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 84 சென்ட் இடம் கடந்த 20 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை அப்பகுதி பொதுமக்களிடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி தனியார் சார்பில் முள்வேலிகளும், இரும்பு கொட்டகைகளும் அமைக்கப்பட்டிருந்தது.