ராஜாபளையம், ஜூன் 18: ராஜபாளையம் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாகம் அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகே, மேலராஜகுலராமன் கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா அடங்கல், குடும்ப தலைவர் இறப்பு நிதி உள்ளிட்ட சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.