திருச்சுழி: திருச்சுழியில் உள்ள முத்துராமலிங்க நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தாலும், ஒரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் வாழும் பகுதியில் மட்டும், நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்த நிலையில், காலிக்குடங்களுடன் பெண்கள் தெருத்தெருவாக அலைகின்றனர்.