ராசிபுரம், ஜூன் 18: ராசிபுரம்-ஆத்தூர் சாலையில், மந்த கதியில் நடந்து வரும் சாக்கடை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஆத்தூர் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இப்பகுதியில் அண்ணாசாலை, அரசு மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. தற்போது சாலையோரம் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் செல்ல வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் சில இடங்களில் முடிவடைந்திருந்தாலும், பல இடங்களில் மந்த கதியில் நடந்து வருகிறது.