தா.பழூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

தா.பழூர், ஜூன் 18 : அரியலூர் மாவட்டம் தா.பழூரில் எஸ்பி சீனிவாசன் அறிவுறுத்தலின் படி மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து பற்றிய அறிவுரை வழங்கப்பட்டது.அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் துறை சார்பில் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தா.பழூர் எஸ்ஐக்கள் சந்திரசேகர் ,லோகநாதன் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்..இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் ஆராஅமுதன் தலைமை வகித்தார்.பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலைப்பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் அதன் அவசியம் குறித்தும் தெரிந்து கொண்டனர். இதனை வீட்டில் உள்ள பெற்றோருக்கும், உறவினருக்கும் தெரியப்படுத்தி பின்பற்றவோம் என்று உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

Related Stories: