கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் விஸ்வநாத தாசின் 134வது பிறந்த நாள் விழா நடந்தது. கோவில்பட்டி வ.உ.சி. நகரில் இந்து மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்க கட்டிடத்தில் நடந்த இவ்விழாவிற்கு தலைமை வகித்த மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், தியாகி விஸ்வநாத தாஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். வட்டாரத் தலைவர் குருசாமி, செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கருமாரி ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர்.