திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை அருகே மதுகுடிக்க பணம் கேட்டு வாலிபரை தாக்கிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை அடுத்த துர்க்கைநம்மியந்தல் பள்ளத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(21). இவர் கடந்த 15ம் தேதி திருவண்ணாமலை-அவலூர்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது, அவரிடம் வடஆண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்தி(20), அவரது அண்ணன் ராசு(27), இவர்களது தந்தை செல்வக்குமார்(50) ஆகியோர் விக்னேஷிடம் மதுக்குடிக்க பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.