ஒட்டன்சத்திரம், ஜூன் 14: ஒட்டன்சத்திரம் அருகே லக்கியன்கோட்டையில் பஸ்சுக்காக காத்திருந்தவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். ஒட்டன்சத்திரம் அருகே லக்கியன்கோட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி(55). இவரும் காந்தி நகரை சேர்ந்த குணசேகரன் (64) என்பவரும் நேற்று மாலை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். திண்டுக்கலில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது.