இடைப்பாடி, ஜூன் 13: இடைப்பாடி பகுதியில் மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கொடும்பாவியை இழுத்துச் சென்று ஊர்வலம் நடத்தினர். இடைப்பாடி தாலுகா மற்றும் நகரப்பகுதிகளில் ஏரி, தடுப்பணைகள், குட்டைகள் உள்ளிட்டவை வறண்ட பாலைவனமாக மாறிவிட்டது. கிணறுகளிலும் நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இதனையடுத்து, மழை பெய்ய வேண்டி கொடும்பாவி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி, மலங்காட்டு பகுதியை சேர்ந்த மேட்டாங்குடி விவசாயிகள் கொடும்பாவி செய்து, அதனை ஊர்வலமாக எடுத்து சென்று ஒப்பாரி வைத்து ஒவ்வொரு ஊராக சுற்றி வந்தனர்.