அருப்புக்கோட்டை, ஜூன் 12: பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால், வாகன பெர்மிட் ரத்து செய்யப்படும் என, அருப்புக்கோட்டையில் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல்நிலையத்தில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முருகன் தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் மாரிமுத்து, செல்லத்துரை கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘கனரக வாகனங்கள் மூலம் வரும் சரக்குகளை பஜாரில் காலை 8 மணிக்கு மேல் இறக்கக்கூடாது. சிறிய வேன்களில் கொண்டு வரும் சரக்குகளை மதியம் 1 மணி முதல் 4 மணி வரை இறக்கலாம். மீறினால், அபராதம் விதிக்கப்படும். 18 வயதிற்கு குறைந்தவர்கள் வாகனங்கள் ஓட்டினால், வாகனங்களை பறிமுதல் செய்து, வாகன பெர்மிட் ரத்து செய்யப்படும். பஜார் கடைக்காரர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக, தங்களது வாகனங்களை கடைகளின் முன்பு நிறுத்தக்கூடாது.