திருவில்லிபுத்தூர், ஜூன் 12: திருவில்லிபுத்தூரில் குப்பைகளில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ராஜபாளையம் மெயின்ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பரபரப்பாக இருக்கும் இந்த சாலையின் அருகே உள்ள ஓடைகள், பாலங்கள் கழிவுகளையும், குப்பைகளையும் எரிக்கின்றனர். இதனால், ஏற்படும் புகை மெயின் ரோடு முழுவதும் பரவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதை தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.