திருச்சுழி, ஜூன் 11: திருச்சுழி பகுதியில், அதிக வேகமாகச் செல்லும் டிப்பர் லாரிகளால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கிராவல் மண் அள்ளிச் செல்கின்றன. இந்நிலையில், லாரிகள் லோடுகளோடு சென்றாலும், காலியாகச் சென்றாலும் வேகமாகச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடி, திருச்சுழி-ராமேஸ்வரம் பகுதிகளில் சாலைகள் தற்போது அகலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் செல்லும் டிப்பர் லாரிகள் திடீரென பிரேக் பிடித்தல், முன்னால் செல்லும் வாகனங்களை முந்துதல் உள்ளிட்ட சமயங்களில் திடீரென விபத்து ஏற்படுகிறது.