வத்தலக்குண்டு, ஜூன் 11: வத்தலக்குண்டுவில் மின்வாரிய ஊழியர் வீடு புகுந்து மர்ம ஆசாமி 10 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வெங்கிடாபட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நாகலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டார். மகன் வெளியூரிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் முருகேசனும், அவரது மனைவி நாகலெட்சுமியும் வீட்டின் கீழ்த்தளத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். முருகேசனின் தாயார் மாடியில் தூங்கி கொண்டிருந்தார்.