செய்யாறு, ஜூன் 11: செய்யாறில் நடந்து வரும் ஜமாபந்தியில் திண்டிவனம்- நகரி ரயில் திட்டப்பணிகளை விரைவு படுத்திடகோரி கலெக்டர் கந்தசாமியிடம் ஆரணி எம்.பி டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு அளித்தார். செய்யாறு தாலுகா அலுவலகததில் நேற்று 2வது நாள் ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் கூட்டணி நிர்வாகிகளுடன் ஆரணி எம்.பி. டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் கோரிக்கை மனு வழங்கினார். அதில் திண்டிவனம்-நகரி ரயில் திட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும், செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருத்துவர்களை நியமித்து, மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி முறையான தாமதமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.