தளபதி சமுத்திரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

நெல்லை, ஜூன் 7: நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு சார்பில், தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர் மதனகுமார் மற்றும் முதுகலை ஆசிரியை லலிதாபாய் ஆகியோருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. வள்ளியூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்து பாராட்டி பரிசு வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பரமசிவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள், பாளை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் விஜயகுமார், டீம் டிரஸ்ட் நிறுவன தலைவர் திருமலைமுருகன், கண்காணிப்புகுழு உறுப்பினர் நடராஜன் மற்றும் நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு தலைவர் பால் அண்ணாத்துரை மற்றும் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பணிஓய்வுபெறும் ஆசிரியர்கள் பணியை பாராட்டி கவுரவித்தனர். கடந்த ஆண்டு இப்பள்ளி பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் தலா ரூ.3 ஆயிரம் பரிசு தொகையை பணி ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர் மதனகுமார் வழங்கி ஏற்புரையாற்றினார். செயலாளர் ஆபிரகாம் டேனியல் நன்றி கூறினார்.

Related Stories: