கார் மீது லாரி மோதி கர்ப்பிணி பரிதாப சாவு

வில்லியனூர், ஜூன் 7: கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஏடிஸ் பிரவீன்குமார் (30). இவரது மனைவி டெசுரிதீன் (27). கர்ப்பிணியான டெசுரிதீன் விழுப்புரத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி பிரசவத்திற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு டெசுரிதீனை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் காரில் அழைத்து வந்தனர்.

வில்லியனூர் அடுத்த திருவண்டார்கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த மினிலாரி கார் மீது மோதியது. மேலும் அந்த வழியாக வந்த மோட்டார் பைக் மீதும் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த கர்ப்பிணி பெண் டெசுரிதீன், அவரது கணவர் ஏடிஸ் பிரவீன்குமார், உறவினர்கள் புஷ்பத்ரீசா, அந்ேதாணி பிலிப், பைக்கில் வந்த திருபுவனை ஜவஹர் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முAன்தினம் கர்ப்பிணி பெண் டெசுரிதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: