நாமகிரிப்பேட்டை, ஜூன் 7: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் உள்ள 60க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள், பயன்பாட்டுக்கு வைத்திருந்த கேரிபேக்குகளை பறிமுதல் செய்து, கடைக்காரர்களுக்கு ₹3 ஆயிரம் அபராதம் விதித்தனர். நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூர் மெயின்ரோடு, கடைவீதி, பஸ் நிலையம், வாரச்சந்தை பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை மற்றும் பேக்கரி கடைகள் என 60க்கும் மேற்பட்ட கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் பாலு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.