குமாரபாளையம், ஜூன் 7: குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், அலுவலர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரம் செயலிழந்துள்ளதால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வராமலேயே, வந்ததாக வருகை பதிவேட்டில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு இயந்திரம், ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், நகராட்சி அலுவலர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வருகின்றனர்.