திருச்செங்கோடு, ஜூன் 7: வையப்பமலை அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர், பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்செங்கோடு தாலுகா பெரியமணலியை சேர்ந்தவர் குருசாமி(56). இவர் தனியார் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இவரும், புதுச்சத்திரத்தை சேர்ந்த ராஜா(25) என்பவரும் பைக்கில் வையப்பமலைக்கு சென்றனர். வையப்பமலை பிரிவு பாதை அருகே சென்றபோது, பின்னால் அமர்ந்திருந்த குருசாமி, திடீரென தவறி ரோட்டில் விழுந்தார்.